சனி, 4 அக்டோபர், 2008

*******தமிழன் என்று சொல்லடா ***** தலை (இருந்தால்) நிமிர்ந்து நில்லடா

தமிழன்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடியிருந்த மக்களை
குழுவாக வந்தடிப்பார்கள்

தமிழ் நாட்டில்
அனைத்து பயிரும் வாட
அணை போட்டு தடுப்பார்கள்
கேள்விகள் கேட்டால்
கேட்பாரற்று அடிப்பார்கள்

கண்ணீர் விட்டாலும்
தண்ணீர் தரும்
கருநாடக இல்லை

ஆனால் மின்சாரம் இல்லையென சொல்லாமல்
மின்னலென கொடுக்க தமிழகம் இருக்கிறது!

அழுது புலம்பியதும்
அணை கட்ட மறுக்கும் கேரளா இல்லை

ஆனால்
அடுத்தவர் விழாவிற்கு அரசாங்க விடுமுறை
அளிக்க தமிழ் நாடு இருக்கிறது!!

வந்தாரை எல்லாம் வாழ வைத்த பெருமை தமிழ்நாட்டிற்கு உண்டு
ஆனால்
வாழ்ந்த தமிழனை எல்லாம் சீரழித்த பெருமை வந்தவனுக்கே உண்டு!!!

தமிழன் என்று சொல்லடா, தலை (இருந்தால்) நிமிர்ந்து நில்லடா



ஞாயிறு, 28 செப்டம்பர், 2008

மழை

இன்று வரை
இல்லை மழை
எதிர் வீட்டு பறவை ( பாவை )
ஏமாற்றிப் பறந்தது
எதிர்பாராத மழை
என் கண்களிலிருந்து !!!!

செவ்வாய், 23 செப்டம்பர், 2008

பிரதிபலன்

கோவிலுக்குள்
சென்று வந்த சாம்பல்
திருநீறானது!!!
கற்பூரம் ஆரத்தி ஆனது!!
வெளியே குழாயடியில்
பிடித்த தண்ணீர்
தீர்த்தமானது!!
வழக்கமாக செய்த
சாதம் பிரசாதம் ஆனது!!!
அனைத்தையும் எடுத்துச்
சென்ற மனிதன்
மனிதனாகவே வந்தான்!